
நாம் அனைவரும், நமது வெள்ளை நிற ஆடைகளை, அதிகமாக விரும்புகிறோம் அல்லவா! அத்தகைய வெள்ளை நிற ஆடைகளை பல முறை சலவை செய்தாலும் கூட, நமது அலமாரிகளில் பாதுகாக்கும் அவற்றை எப்பொழுதும் பளபளப்பு மற்றும் வெண்மை கொண்டதாக வைத்திருக்கவே விரும்புகிறோம். ஒருவேளை, நமது வெள்ளை நிற ஆடைகளை நாம் சரியாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டால், அவை தன்னுடைய பளபளப்பையும் மற்றும் பிரகாசத்தையும் நிச்சயமாக இழக்கக்கூடும். மேலும், வெள்ளை நிற ஆடைகளில் படிந்திருக்கும் கறைகளை, குறிப்பாக அதில் இருக்கக்கூடிய மஞ்சள் நிற திட்டுக்களை நீக்குவது என்பது மிகப்பெரிய வேலையாகும். அவ்வாறு மஞ்சள் நிற திட்டுக்கள் அடங்கிய வெள்ளை நிற ஆடைகளில் வினிகர், எலுமிச்சை சாறு போன்ற வீட்டு வைத்திய பொருட்களைப் பயன்படுத்திய பிறகும் கூட, அவற்றிலுள்ள மஞ்சள் திட்டுக்களை நீக்கி, வெண்மையைப் பெற முடியாமல் நாங்கள் ஏமாற்றமடைந்தோம்.
நிச்சயமாக, பளிச்சென்று பிரகாசமாக இருக்கக்கூடிய ஒரு புத்தம் புதிய வெள்ளை நிற ஆடையை, ஓரிரு முறை சலவை செய்வதிலேயே அவை மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கி விடும். ஆனால், இனி அந்த கவலை வேண்டாம். மேலும், அந்த ஆடைகளை நாம் அடிக்கடி அணிந்தாலும் மற்றும் பலமுறை சலவை செய்தாலும் கூட கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இங்கே, கொடுக்கப்பட்டிருக்கும் எளிமையான சலவைக் குறிப்புகளைக் கொண்டும், மேலும் நம் வெள்ளை நிற ஆடைகளை பிரகாசமாக வைத்திருக்கக்கூடிய சரியான பொருட்களைப் பயன்படுத்துவதாலும், அவற்றை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்க முடியும்.
வெள்ளை நிற ஆடைகளில் மஞ்சள் நிற திட்டுகள் படிவதைத் தடுப்பதற்கு, நீங்கள் பின்பற்றப்பட வேண்டிய படிகள் இங்கே:
1. சரியான முறையில் பாதுகாத்தல்
நமது வெள்ளை நிற ஆடைகள், நீண்ட நாட்களுக்கு வெண்மையாக இருக்க வேண்டுமெனில், அதனை சரியான முறையில், பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும் ஆனால், நாம் அதில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. மேலும், நாம் பாதுகாக்கும் இடங்களில் உருவாகும் எதிர்பாராத காரணங்களால் அவை மஞ்சள் நிறமாக மாறுவதும் இல்லை. அதனை உறுதி செய்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள சில படிகள் இங்கே:
வெள்ளை நிற ஆடைகளை, ஈரப்பதத்தை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சைகள் இல்லாத, குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடங்களில் வைத்திருத்தல் வேண்டும்
வெள்ளை நிற ஆடைகளை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமானால், அவற்றில் கறைகள் எதுவும் இல்லாத வகையில், சலவை செய்து நன்கு உலர்த்தப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெள்ளை நிற ஆடைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கு, தரமான, அமிலமில்லாத காகிதங்களுக்கு இடையிலும், பிளாஸ்டிக் சேமிப்பு பெட்டிகள், பைகள் அல்லது கூடைகளைப் பயன்படுத்துதல் சிறந்தது. மேலும், நாம் அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் ஏனெனில், அவற்றில் இருக்ககூடிய நிறம் வெள்ளை நிற ஆடையில் ஒட்டிக் கொள்ளும் என்று நிச்சயமாக நாங்கள் நினைக்கிறோம்.

துணிகளை அலமாரிகளில் அருகருகே தொங்க விடும் போது, அவற்றின் சாயம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், வெள்ளை நிற ஆடைகளை, அடர்ந்த நிறமுள்ள ஜீன்ஸ் துணிகளுக்கு அருகில் வைக்கவோ, தொங்கவிடவோ வேண்டாம் என ்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். மேலும் ஹேங்கர்களில் இருக்ககூடிய வெள்ளை நிற ஆடைகளை நல்ல காற்றோட்டமாக, போதிய இடைவெளி விட்டு மாட்டி வைக்க வேண்டும்.
2. வெள்ளை நிற ஆடைகளை அடிக்கடி சலவை செய்யவும்
வெள்ளை நிற ஆடைகளை ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்திய பிறகே, அவை சலவை செய்யப்படுகிறது என்பதை நாங்கள் இங்கு உறுதி செய்கிறோம். நாம் பயன்படுத்தக் கூடிய வெள்ளை நிற ஆடைகளை விலைமதிப்பற்ற ஒன்றாக நாம் கருதுவதால், அதனை அடிக்கடி சலவை செய்வதைத் தவிர்ப்பதற்காக, அதனை பல முறை பயன்படுத்திய பிறகே, அழுக்குத் துணிகள் இருக்கும் கூடைகளில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால், வெள்ளை ஆடைகள் என்று வரும்போது, அவற்றை ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்திய பிறகு அதனை சலவை செய்திட வேண்டுமென நாங்கள் பரிந்துரை செய்கிறோம். ஏனெனில், அவற்றில் துர்நாற்றம் வீசாமலோ, பெரிய அளவில் கறைகள் இல்லாமலோ இருந்தாலும் கூட, நம் உடலில் உருவாகக்கூடிய எண்ணெய் பசை மற்றும் வியர்வை போன்றவைகள் அவற்றிலேயே தங்கி, காலப்போக்கில் வெள்ளை நிற ஆடைகளை மஞ்சள் நிறமாக மாற்றக் கூடும்.
3. சலவை செய்யும் போது, வெள்ளை நிற ஆடைகள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்
துணிகளை சலவை செய்ய ஆரம்பிக்கும் போது, எப்பொழுதும் வெள்ளை நிற துணிகளையும், மற்ற துணிகளையும் தனித்தனியாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், வெள்ளை நிற துணிகளை மட்டும் தனியாக சலவை செய்யும் அளவிற்கு போதுமான துணிகள் இல்லையென்றாலும் கூட, அவற்றை மற்ற துணிகளிடமிருந்து தனியாக பிரிக்க வேண்டும் என்பதை நாங்கள் பரிந்துரைக்கிறோம். அவ்வாறு பிரிக்கப்படும் வெள்ளை நிற துணிகள், போதுமான அளவில் சேர்ந்தவுடன் அவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து சலவை செய்யவும்.
4. பிரகாசமான வெள்ளை நிற ஆடைகளைப் பெறுவதற்கு, அவற்றை முன்கூட்டியே ஊற வைத்தல் வேண்டும்
அவை அலுவலகத்திற்கு அணிந்து செல்லும் வெள்ளை சட்டையோ அல்லது ஜிம்மிற்குப் பயன்படுத்தும் வெள்ளை நிற டி-சர்ட்டோ எதுவாக இருந்தாலும் சரி, அந்த ஆடைகளை டிடர்ஜென்ட்டைக் கொண்டு சலவை செய்ய தொடங்குவதற்கு முன்பு, அவற்றை ஊற வைக்க வேண்டும் என்ற நல்ல யோசனையை நாங்கள் கற்றுக் கொண்டோம். மேலும், துணிகளை முன்கூட்டியே ஊற வைப்பதினால் அவற்றில் இருக்கக்கூடிய, கடினமான கறைகள் சலவை செய்வதற்கு ஏற்றவாறு தளர்த்தப்பட்டு, கறையை எளிதாக நீக்குவதற்கு உதவுகிறது என்பதை அறிந்து கொண்டோம். மேலும், வெள்ளை துணிகளில் இருக்கக்கூடிய எந்த விதமான கறைகளையும் நீக்குவதற்கு ரின் ஆலா ஃபேப்ரிக் ஒயிட்னர் போன்ற நல்ல தரமான, ஃபேப்ரிக் ஒயிட்னரைப் பயன்படுத்தி துணிகளை ஊற வைக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். வெள்ளை நிற துணிகளை சலவை செய்வதற்கு முன்பு, 3½ மூடி அளவு கொண்ட ரின் ஆலா ஃபேப்ரிக் ஒயிட்னரை அரை வாளி தண்ணீரில் கலந்து, அவற்றில் துணிகளை அரைமணிநேரம் ஊற வைத்தாலே போதும். அவற்றில் இருக்கக்கூடிய கடினமான கறைகளை இப்போது எளிதாக நீக்கி விடலாம்.
உங்களின் வெள்ளை நிற ஆடைகளில் மிகவும் கடினமான கறைகள் இருந்தால், அந்தக் கறை படிந்த பகுதியை மட்டும் மேலே குறிப்பிட்டுள்ள அளவில் தயாரிக்கப்பட்ட அதிக செறிவான கரைசலில் ஊறவைக்க நாங்கள் பரிந்துரை செய்கிறோம். 3½ மூடி ரின் ஆலா ஃபேப்ரிக் ஒயிட்னரை ஒரு குவளை நீரில் ஊற்றி, கரை படிந்துள்ள பகுதியை மட்டும், இந்த பிளீச் கரைசலில் 20 நிமிடம் ஊற வைத்து பின்பு அலசவும்.
எனினும், நீங்கள் பயன்படுத்த வெள்ளை நிற துணிகள் ஃப்ளீச்சீங் செய்வதற்கு ஏற்றதாக இருக்கிறதா, இல்லையா என்பதை அதிலிருக்கும் லேபிளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அல்லது துணிகளின் ஓரங்களில் இருக்கக்கூடிய பயன்படாத பகுதியில், டெஸ்ட் செய்து அவை ஃப்ளீச்சீங் செய்வதற்கு ஏற்றதாக உள்ளதா என்பதை சரி பார்க்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.