தலைப்பு: உங்கள் குழந்தையின் ஆடைகளை அவர்களின் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு மென்மையாக வைத்திருப்பது எப்படி

ஒரு குழந்தையின் தோல் மிகவும் உணர்திறன் கொண்டது. தடிப்புகள், அரிக்கும் தோலழற்சி மற்றும் ஒவ்வாமைக்கு ஆளாகிறது. கரடுமுரடான துணி ஆடைகளை அணிவதால் தோல் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும். உங்கள் குழந்தையின் துணிகளை எவ்வாறு மென்மையாக வைத்திருக்க முடியும் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள், இதனால் அவர்களின் தோல் தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

குழந்தைகள் ஆடை |துவைப்பது| சலவை சோப் & துணி சாப்ட்னர்ஸ் |கம்போர்ட்
விளம்பரம்
Comfort pure

பெற்றோர்களாகிய நமக்கு குழந்தைகளின் மென்மையான தோல் திடீரென வெடிப்பு அல்லது ஒவ்வாமைகளாக தோன்றும் போது நமது கவலைக்கு எல்லையே இல்லை.  அவர்கள் எல்லா நேரங்களிலும் சுத்தமான மற்றும் துவைக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருப்பதை நாம் உறுதி செய்யலாம், அது போதாது என்று நாங்கள் நம்புகிறோம்.  சோப்பு மட்டும் சேர்த்து துவைப்பது துணிகளை கடினமானதாகவும், உயிரற்றதாகவும் ஆக்குகிறது, பின்னர் அவை நம் குழந்தையின் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் தேய்த்து தேவையற்ற தோல் எரிச்சலை ஏற்படுத்துகிறது.  துவைப்பதோடு, நமது குழந்தையின் ஆடைகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டு கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் இல்லாதவை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.  இந்த கவலைகளை சமாளிக்க, துணிகளை துவைப்பதற்கு முன்பு வினிகரில் ஊற வைப்பது போன்ற வீட்டு குறிப்புகளை முயற்சித்தோம்.  துரதிர்ஷ்டவசமாக, இது எங்களுக்கு காடி மணம் கொண்ட துணிகளை மட்டுமே விட்டுச் சென்றது, இது துணிகளில் பாக்டீரியா மற்றும் கிருமிகள் இருக்கிறதா இல்லையா என்று யோசிக்க வைத்தது  இருப்பினும், ஓரளவு சோதனை மற்றும் பிழை இன் பின்னர், உங்கள் குழந்தையின் ஆடைகள் மென்மையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்த நீங்கள் பின்பற்றக்கூடிய  பட்டியலை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

உனக்கு தேவைப்படும்:

  • சலவை சோப்பு
  • கம்பர்ட் பியுர் பேப்ரிக் கண்டிஷ்னர்
விளம்பரம்
Comfort pure

குழந்தையின் ஆடைகளை கையால் துவைப்பது எப்படி

  1. முதல் கட்டம்: கைகளை கிருமி நாசினி சோப்பால் தேய்த்து நன்றாக கழுவவும்

    அழுக்கு கைகள் பாக்டீரியாவின் மிகப்பெரிய கூடாரமாக இருக்கின்றன, அதனால்தான் குழந்தை ஆடைகளை கையாளுவதற்கு முன்பு சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை சுத்தப்படுத்தி கழுவ வேண்டும்.

  2. இரண்டாம் கட்டம்: ஆடை லேபிள் வழிமுறைகளை சரிபார்க்கவும்

    குழந்தைகள் ஆடைகளின் லேபிள்களில் உள்ள வழிமுறைகளைப் படிப்பது எந்த வித துணி மற்றும் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது, இதை அனுபவதால் புரிந்து கொண்டோம்.

  3. மூன்றாம் கட்டம்: நீரின் வெப்பநிலையை அளவிடவும்

    மிகவும் சூடான நீரில் துணிகளை துவைப்பது உங்கள் குழந்தையின் ஆடைகள் அமைப்பை மாற்றியமைக்கும், மேலும் ஆடைகள் கிழிய கூடும்.  இது உங்கள் கைகளையும் சுட்டுவிடும் அதனால்தான் உங்கள் குழந்தையின் துணிகளை துவைப்பதற்கு முன்பு தண்ணீரின் வெப்ப நிலையை சரிபார்க்க பரிந்துரைக்கிறோம்.  இது 30 செ முதல் 40 செ டிகிரி வரை இருக்க வேண்டும்.

  4. நான்காம் கட்டம்: துவைப்பதற்கு முன்னும் பின்னும் ஊறவைக்கவும்

    துணிகளை துவைக்கும் முன் பாக்டீரியாக்கள் உருவாகலாம், அதனால்தான் உங்கள் குழந்தையின் துணிகளை 30 நிமிடங்கள் துவைக்கும் முன் சூடான நீரில் ஊற வைக்கலாம் துவைத்த பின் மீண்டும் வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்க பரிந்துரைக்கிறோம்.  இது குழந்தைகளின் ஆடைகளில் உள்ள பெரும்பாலான பாக்டீரியாக்கள் அகற்றப்படுவதை உறுதி செய்யும்.

  5. ஐந்தாம் கட்டம்: குழந்தைகளுக்கான சோப்பு சலவையை பயன்படுத்தவும்

    வழக்கமான சோப்பை பயன்படுத்துவது உங்கள் குழந்தையின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஒவ்வாமை மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அனுபவத்தால் அறிந்து கொண்டோம். அதனால்தான் உங்கள் குழந்தையின் துணிகளை துவைக்கையில் சுற்றுச்சூழல் நட்பு கொண்ட சோப் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாத ஒரு சோப்பை பயன்படுத்த வேண்டும்.

  6. ஆறாம் கட்டம்: மென்மையான துணி கண்டிஷனரைப் பயன்படுத்தவும்

    சோப்பை மட்டுமே பயன்படுத்துவது ஓரிரு துவைப்புகளுக்குள் துணிகளை மிகவும் கடினமாக்குகிறது என்பதை நாங்கள் கவனித்தோம்.  குழந்தைகளுக்கான சோப்பு கூட சரியாக துவைக்காமல் போகலாம்.  இதற்கு  கம்ஃபோர்ட் ப்யூர் போன்ற துணி கண்டிஷனர்  தேர்வு செய்தோம். சோப்பை நன்றாக அலசிய பின், ஒரு வாளி சுத்தமான தண்ணீரில் அரை கப் கம்ஃபோர்ட் ப்யூர் சேர்த்து துணிகளை ஐந்து நிமிடங்கள் கம்ஃபோர்ட் ப்யூரில் ஊறவைத்தோம்.  இதற்குப் பிறகு, துணிகளில் இருந்து ஒரு லேசான புத்துணர்வான மனம் இருப்பதை நாங்கள் கவனித்தோம், தொடும்போது கணிசமாக மென்மையாக இருந்தது, இது வெறும் சோப் பயன்படுத்தும் போது இருப்பது இல்லை.

    லேபிளை சரிபார்க்கும் போது, ​​துணி கண்டிஷனர் தரப்படுத்தப்பட்ட ஆண்டிமைக்ரோபியல் சோதனைகளில் தேர்ச்சி பெற்றது என்பதையும் நாங்கள் படித்தோம், இது துணிகளை பயன்படுத்திய பின் பாக்டீரியா மற்றும் கிருமிகளிலிருந்து விடுபடும் என்ற உறுதி அளிக்கிறது.  பெற்றோர்களாகிய நாம்,  குழந்தைகள் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம், அதனால்தான் இந்த குறிப்பிட்ட அம்சம் எங்களை பெரிதும் கவர்ந்தது.  மேலும், சிறந்த பேக்கேஜிங், கம்ஃபோர்ட் ப்யூர் சாயங்கள் இல்லாதது மற்றும் கூடுதல் / செயற்கை வண்ணங்கள் இல்லை என்று அறிந்தோம்.

  7. ஏழாம் கட்டம்: குழந்தை ஆடைகளை சரியாக உலர வைக்கவும்

    உங்கள் குழந்தையின் ஆடைகளை சூரிய ஒளியில் நன்கு உலர வைப்பது அவசியம்.  எங்கள் அனுபவத்தில், ஈரமான ஆடைகள் குழந்தைகளுக்கு பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும்.  ஒரு நல்ல துணி கண்டிஷனர் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் குழந்தைகளின் அனைத்து ஆடைகளிருந்தும் பாக்டீரியா மற்றும் கிருமிகளை அகற்ற சூரிய ஒளி சிறந்தது.

குழந்தை துணிகளை வாஷிங் இயந்திரம் கொண்டு எப்படி துவைப்பது

  1. கட்டம் ஒன்று: உங்களது ஆடையை துவைக்கும் முன் குழந்தையின் ஆடைகளை துவைக்கவும்

    சலவை இயந்திரங்களும் பாக்டீரியாவின் மையமாக இருக்கும்.  உங்கள் துணிகளிலிருந்து குழந்தையின் ஆடைகளுக்கு பாக்டீரியாக்கள் மாற்றப்படுவதை தடுக்க, முதலில் அவற்றை துவைப்பது நல்லது என்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம்.

  2. இரண்டாம் கட்டம்: குழந்தைகளுக்கான சோப்பு சலவையை பயன்படுத்தவும்

    வழிமுறைகளைப் பின்பற்றி, துணிகளை ஏற்றுவதன் அடிப்படையில் சரியான அளவு குழந்தைகளுக்கான சோப்பை பயன்படுத்தவும், சோப்பு அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது குழந்தையின் உடைகளில் கடுமையான எச்சத்தை ஏற்படுத்தக்கூடும், இதனால் தோல் எரிச்சல் மற்றும் / அல்லது ஒவ்வாமை ஏற்படும்.

  3. மூன்றாம் கட்டம்: உங்கள் வாஷிங் இயந்திரத்தில் துணி கண்டிஷனரை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்

    உங்களிடம் செமி ஆட்டோமேட்டிக் துணி துவைக்கும் இயந்திரம் இருந்தால் 1 கப் கம்பர்ட் பூயுரை துணி துவைத்த பின் கடைசியாக ஊற்றி அலச விடவும். டாப் லோடு துணி துவைக்கும் இயந்திரம் என்றால் அதில் உள்ள சிறு கம்பார்ட்மெண்டில் 1 கப் கம்பர்ட் பூயுரை துணி துவைக்கும் முன் ஊற்றவும். கம்பார்ட்மெண்ட் இல்லையெனில் துணி துவைக்கும் இயந்திர டப்பில் கம்பர்ட் பூயுரை கடைசி அலசலுக்கு முன் சேர்கலாம். பிரண்ட் லோடு துணி துவைக்கும் இயந்திரம் இருந்தால் 1 கப் கம்பர்ட் பூயுரை துணி துவைக்கும் முன் கம்பார்ட்மெண்டில் ஊற்றவும்.

    பயன்படுத்திய பிறகு ஆடைகள் மிருதுவாக இருப்பதை உணர்ந்தோம். அனைத்து வகையான ஆடைகளுக்கும் கம்பர்ட் பூயுர் பயன்படுத்தலாம் என்பதில்  நாங்கள்  மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

  4. நான்காம் கட்டம்: உங்கள் குழந்தையின் ஆடைகளை சூரிய ஒளியில் நன்கு உலர வைப்பதன் மூலம் கிருமிகள் அழிகின்றன

    துவைத்தும், அவை இயற்கை சூரிய ஒளியில் நன்கு உலரட்டும், இது ஆடைகளில் எஞ்சியிருக்கும் பாக்டீரியா மற்றும் கிருமிகளைக் கொல்லும் என்று அறியப்படுகிறது.  கிருமிநாசினியுடன் சூரிய ஒளியின் அல்ரா வைலட் ரேஸ் ப்ளீச் சலவைக்கு உதவுகின்றன.  இது குழந்தைக்கு பயன்படுத்தப்படும் வெள்ளை பெட் ஷீட், துண்டுகள் மற்றும் துணி டயப்பர் போன்றவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதை நாங்கள் கண்டோம்.  தீவிர சூரிய ஒளியை வெளிப்படுத்தினால் டார்க் நிற ஆடைகள் மங்கக்கூடும், அவற்றை நிழலில் உலர்த்துவது நல்லது.

     விரைவாக உலர உங்களுக்கு நிறைய ஆடைகள் இருந்தால் சலவை இயந்திரத்தின் உள்ளே சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர்ந்த துண்டை சேர்த்து ஸ்பின் செய்யலாம், உலர்ந்த துண்டு மற்ற துணிகளிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்ச உதவும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது