பட்டுப் புடவைகளை வீட்டில் எவ்வாறு சலவை செய்வது?

நாம் மிகவும் விரும்பும் பட்டுப் புடவைகளை சுத்தப்படுத்துவதற்கு உலர் சலவை மட்டுமே ஒரே வழிமுறை அல்ல என்பதை அறிந்தால், நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். வீட்டிலேயே பட்டுப் புடவைகளை எவ்வாறு சிரமமின்றி சலவை செய்யலாம் என்பதை பின்வரும் விளக்கத்தினை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

பட்டுப்புடவைகளை வீட்டிலேயே சலவை செய்யலாம்
விளம்பரம்
Comfort core

நாம் அனைவரும், நமது விலையுயர்ந்த, நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப் புடவைகளை, மிகவும் கவனமாகப் பராமரிப்போம். பெரும்பாலும், பட்டுப் புடவைகளை விசேஷங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவோம். அவற்றில் இருக்கும் நுண்மையான நூலிழை வேலைப்பாடுகள், மெல்லிய நுண் ஒப்பனைகள், இவற்றில் எல்லாம் ஏதேனும் கறைகள் ஏற்பட்டு விட்டால், அவற்றை தூய்மைப்படுத்துதல், கறைகளை அகற்றுதல் எல்லாம் மிகவும் சிரமமானவை. இவ்வகை உடைகளை, உலர் சலவைக்கு அனுப்பலாம் என்ற போதும், அடிக்கடி உலர் சலவை செய்வது, சரியான வழிமுறையாக இருக்காது, ஏனெனில் உலர்சலவை செய்வதற்கு அதிகப் பணம் செலவாகும் அது மட்டுமன்றி உலர் சலவை செய்த உடைகளும்  சாயமிறங்கி, தோற்றம் மங்கலாகிப் போகின்றன.

பட்டுப் புடவைகளை வீட்டிலேயே சலவை செய்ய, மேற்கொள்ளக் கூடிய பல வழிமுறைகளான, பூந்திக் கொட்டை, ரீத்தா அல்லது ஷாம்பூ போன்றவற்றை கேள்விப்பட்டுள்ளோம். அவ்வழிமுறைகளை முயற்சித்துப் பார்த்ததில், பூந்திக் கொட்டை பயன்படுத்தி பட்டுப் புடவைகளை சலவை செய்வது, அதிக நேரமெடுப்பதையும், கறைகளை அவ்வளவு நேர்த்தியாக நீக்குவதில்லை என்பதையும் கண்டறிந்தோம். மற்றுமோர் சந்தர்ப்பத்தில், ஷாம்பூவை பயன்படுத்தியதில், புடவைகள் நிறம் மங்கியும், ஜரிகைகளின் பளபளப்பு குறைவதையும், எங்களால் அறிய முடிந்தது.

ஆனாலும், காலப்போக்கில், பட்டுப் புடவைகளை பதமாக, துணிக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தாமல், சலவை செய்ய, ஒரு வழிமுறையை முயற்சி செய்து, அதை பரிசோதனையும் செய்து பார்த்துள்ளோம். உங்களது வேலையை சுலபமாக்க, பட்டுப் புடவைகளை வீட்டில் எவ்வாறு, சிரமமின்றி தூய்மைப்படுத்தலாம் என்ற படிமுறை விளக்கக் கையேடு ஒன்றினை பட்டியலிட்டுள்ளோம்.

உனக்கு தேவைப்படும்:

  • வாளி / ஆழமற்ற தொட்டி
  • லவ் அண்ட் கேர் ஷைனிங் ஸ்கில்ஸ் எக்ஸ்பர்ட் கேர் வாஷ் லிக்விட் டிடர்ஜெண்ட்
  • குளிர்ந்த தண்ணீர்
விளம்பரம்
Comfort core

பட்டுப் புடவைகளை எவ்வாறு வீட்டிலேயே சலவை செய்வது

  1. படிநிலை 1: எப்போதும் குளிர்ந்த நீரையே பயன்படுத்துங்கள்

    பட்டுப் புடவை சலவை செய்ய, குளிர்ந்த/இளஞ் சூட்டில் இருக்கும் தண்ணீர் உகந்ததாக இருக்குமென கண்டறிந்தோம். சூடான நீரை பயன்படுத்துகையில், வெப்பம், புடவையின் நூலிழைகளை சேதப்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

  2. படிநிலை 2: துணியின் சிறு பகுதியில் முதலில் பரிசோதிக்கவும்

    முழு புடவையையும் ஊற வைத்து துவைப்பதற்கு முன், துணியின் ஒரு சிறு பகுதியில், முதலில் பரிசோதிக்கவும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில், ஒரு சிறிய பஞ்சினை, பட்டுப் புடவை துவைக்கும் டிடர்ஜண்ட் மற்றும் நீரில் தோய்த்து, அதனை புடவையின் உள் பகுதியில், அதாவது, வெளிப்படையாக தெரியாத பகுதியில், தேய்த்து, பரிசோதனை செய்து பார்க்கவும். இந்தப் பரிசோதனையின் மூலம், பட்டுப் புடவை, சாயம் வெளுக்கிறதா, தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் சோப்புத் திரவம், துணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கிறதா, போன்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம். புடவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனில், அதே சலவை முறையைத்  தொடரலாம். சாயம் வெளியேற்றும் பட்டு உடைகளை  உலர் சலவை மட்டுமே செய்ய வேண்டும்.

  3. படிநிலை 3: ஊற வைக்கும் கரைசலை உருவாக்கவும்

    நுட்பமான பட்டுப் புடவைகளுக்கு, நன்றாக தூய்மைப்படுத்துவதுடன், நீண்ட காலம் நிலைக்கச் செய்யக்கூடிய, மென்மையான டிடர்ஜெண்ட்கள் தேவை. பட்டு, ஒரு இயற்கையான புரத நூலிழையாதலால், மனிதனின் தோலினைப் போன்ற உணர்திறன் கொண்டது. நமது மனித தோலில் உராய்வு ஏற்படின் உண்டாகும் உணர் மாற்றம் போல், பட்டிலும் ஏற்படும். சாதாரண டிடர்ஜெண்ட் கொண்டு தொடர்ந்து பட்டினை சலவை செய்தால், பட்டு நைந்து போய், பாதிப்படைந்து விடும். இவை அனைத்தும், நம் பட்டுப்புடவைகளுக்கு  கூடுதல் கவனமும், பராமரிப்பும் தேவை என்பதை உணர்த்துகின்றன. 

    நாங்கள், பட்டுத் துணிகளுக்காக பிரத்யேகமாக, தயாரிக்கப்பட்ட மென்மையான  டிடர்ஜெண்டாகிய, லவ் அண்ட் கேர் ஷைனிங் ஸ்கில்ஸ் எக்ஸ்பர்ட் கேர் வாஷ் லிக்விட் டிடர்ஜெண்ட்டை முயற்சித்துப் பார்த்தோம். அதன் லேபிளை கவனிக்கையில், அதில் நடுநிலை pH இருப்பதைக் கண்டறிந்தோம். இதனால், பல தொடர் சலவைகளுக்குப் பின்னும், பட்டின் பளபளப்பும், இழை நயமும் குறையாதிருப்பதைக் கண்டோம். மேலும், இதில் எவ்வித நொதியோ, ப்ளீச்சோ இல்லாததால், பட்டுப் புடவையின் நிறமும், உறுதித் தன்மையும் பாதுகாக்கப்படுகின்றன.

  4. படிநிலை 4: புடவையை ஊற வைக்கவும்

    அரை வாளி தண்ணீருடன், ஒரு மூடி  லவ் அண்ட் கேர் ஷைனிங் ஸ்கில்ஸ் எக்ஸ்பர்ட் கேர் வாஷ் லிக்விட் டிடர்ஜெண்ட்டை கலந்து, கரைசலை தயாரித்தோம். பிறகு, இந்தக் கரைசலில், எங்கள்  பட்டுப் புடவையை ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஊற வைத்தோம். ஏனெனில், அதிக நேரம் ஊற வைப்பது, துணிகளை சேதப்படுத்திவிடும்.

  5. படிநிலை 5: மெதுவாக அலசவும்

    ஊற வைத்த பட்டுப் புடவையை வெளியே எடுத்து, குளிர்ந்த நீரில் மெதுவாக அலசவும். இதன் மூலம், எஞ்சியிருக்கும் டிடர்ஜெண்டினை நீக்கிவிடலாம். லவ் அண்ட் கேர் ஷைனிங் ஸ்கில்ஸ் எக்ஸ்பர்ட் கேர் வாஷ் லிக்விட் டிடர்ஜெண்ட்டில் குறைந்த அளவே நுரைக்கும் தன்மை இருப்பதனால், புடவைகளை அதிகமாக அலசத் தேவையில்லை. இதன் மூலம், புடவைகளை அதிகமாக அலசுவதால் ஏற்படும் சேதங்களை தவிர்க்கலாம்.

  6. படிநிலை 6: புடவையை அலசியதும் இந்த பாதுகாப்பு வழிமுறைகளை கையாளுங்கள்

    புடவையின் நூலிழைகள் பிரிந்து விடும் என்பதால், புடவையை ப்ரஷ் கொண்டு தேய்க்கவோ, கசக்கவோ செய்யாதீர்கள். இது, நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய மிகப்பெரிய தவறு ஆகும். பட்டுப் புடவையை முறுக்கவோ, பிழியவோ செய்யாதீர்கள், இதனால் புடவையில் நிரந்தர சுருக்கங்கள் ஏற்பட வாய்புள்ளது..

  7. படிநிலை 7: நேரடியான சூரிய ஒளியில் உலர்த்துவதை தவிர்க்கவும்

    உங்கள் புடவையை, நேரடியாக சூரிய ஒளி படாதவாறு, அலமாரியிலோ, கம்பியிலோ தொங்க விடவும். காய வைக்கையில், புடவையின் உட்புறம் வெளியே இருக்குமாறு இருப்பதை உறுதி செய்யுங்கள். முடிந்தால், ஒரு துண்டினைக் கொண்டு, புடவையில் இருக்கும் நீரினை முதலில் ஒற்றி எடுத்து விடுங்கள். இதனால்,  விரைவாக தண்ணீர் வடிந்து விடும்.

  8. படிநிலை 8: கவனமாக பாதுகாத்து வைக்கவும்

    பட்டுப் புடவைகளை மற்ற ஆடைகளோடு சேர்த்து வைக்க வேண்டாமென பரிந்துரை செய்கிறோம். நாங்கள் புடவைகளை மஸ்லின் துணி கொண்டு சுற்றி, பிறகு, புடவைகளுக்கான பையில் வைக்கிறோம். இதனால், புடவை பலவகையான பொருட்களுடன் உராய்வது தவிர்க்கப்பட்டு, புடவை கிழிவதும், இன்னபிற சேதங்களும் தவிர்க்கப்படுகிறது.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது