துவைக்கும் சுகாதாரம்| சலவை இயந்திரம்| சோப்பு மற்றும் துணி சாப்ட்னர்

நம்மைச் சுற்றி காற்று உள்ளது போல் ,நம்முடைய ஆடைகள் உட்பட அனைத்து வகையான மேற்பரப்புகளில் கிருமிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அழுக்கு, பாக்டீரியா மற்றும் கிருமிகளிலிருந்து அவற்றை எவ்வாறு வைத்திருக்க முடியும் என்பதை அறிய படிக்கவும்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

துவைக்கும் சுகாதாரம்| சலவை இயந்திரம்| சோப்பு மற்றும் துணி சாப்ட்னர்
விளம்பரம்
Comfort antibac

அறிமுகம்: வழக்கமான சோப்பை பயன்படுத்தி துணி துவைக்கும் இயந்திரத்தில் (அல்லது கைகளால்) துணிகளை துவைத்தால் போதும், அவை சுத்தமாகவும், அழுக்கு, பாக்டீரியா மற்றும் கிருமிகளில் இருந்து விடுபடும் என்று நாம் கருதுகிறோம்.  ஆனால் உண்மை அதுவல்ல.  சில நேரங்களில், நாம் நமது வியர்வை மற்றும் அழுக்கு துணிகளை வாஷரில் துவைக்கும் போது, ​​அவை சுத்தமாக வெளியே வரக்கூடும், ஆனால் எல்லா வகையான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் சேர்த்து கொண்டு வரலாம், ஒருவேளை வாஷரில் மிஞ்சியிருக்கும் அழுக்கு அல்லது வியர்வை காரணமாக இருக்கலாம்.  இது தவிர, துணிகளை துவைத்த பின் ஈரபதம் / பூஞ்சை வாசனையை வெளிப்படுத்தக்கூடும், இது விரும்பத்தகாதது.  எனவே, நம் துணிகளில் உள்ள அழுக்கு, பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வாசனையை வெற்றிகரமாக அகற்ற நாம் பின்பற்ற வேண்டிய சில கூடுதல் விஷயங்கள் உள்ளன.  இங்கே, உங்கள் கைத்தறி, துண்டுகள் மற்றும் துணிகளை சுத்தப்படுத்த உங்களுக்கு உதவ சில பயனுள்ள உதவிக்குறிப்புகளை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம், இதனால் அவை முற்றிலும் கிருமி இல்லாதவையாகவும், ஒவ்வொரு முறை துவைத்த பின்னும் புதியதாகவும் சுத்தமாகவும் இருக்கும்!

1. சூடான நீரில் துணிகளை துவையுங்கள், ஆனால் முதலில்  லேபிளை சரிபார்க்கவும்!

நம்புங்கள், இந்த உதவி குறிப்பு எங்களுக்கு அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஒப்பீட்டளவில் சூடான நீரில் துணிகளை துவைப்பது  எளிமையானது, அதாவது 55 முதல் 60 டிகிரி வெப்பநிலையில், பின்பற்றுவது ஒரு நல்ல நடைமுறை.  ஏன்? என்றால் இது உங்கள் துணிகளை பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறுவதை தடுக்கும்.  சூடான நீரில் துவைக்கும் போது நமது ஆடைகள் சுத்தமாக வெளியே வருவதையும் நாங்கள் கவனித்திருக்கிறோம்.  சூடான நீரில் ஆடைகள் சுருங்குவதைப் பற்றி கவலைப்படுவது பொதுவானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், எனவே ஒரு ஆடையை துவைக்க கூடிய மிக உயர்ந்த வெப்பநிலையை காண நாங்கள் எப்போதும் துவைக்கும் பராமரிப்பு லேபிளை சரிபார்க்கிறோம்.  மேலும், இந்த நாட்களில் பெரும்பாலும் சலவை இயந்திரங்கள் உள்ளமைக்கப்பட்ட ஹீட்டர்களை கொண்டுள்ளன, அவை தனிப்பயனாக்கப்பட்ட ஆடை பராமரிப்பை வழங்குவதற்காக பொருத்தப்பட்டுள்ளன.  அவை சூடான, வெதுவெதுப்பான, ஒவ்வாமை–இல்லாத மற்றும் பலவித மாடல்களில் இருக்கின்றன.

2. அழுக்கு மற்றும் கிருமிகளை அகற்ற வாஷரை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்

உங்கள் சலவை இயந்திரத்தில் அழுக்கு, பாக்டீரியா மற்றும் கிருமிகள் குவிந்துவிடும், இது துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?  ஆம், அது உண்மை என்பதை நாங்கள் அறிந்தோம்.  சலவை இயந்திரங்களின் சமீபத்திய மாடல்கள் உள்ளவர்களுக்கு கவலை வேண்டாம். ஏனென்றால், இந்த இயந்திரங்கள் தொட்டியின் உள் சுவர்களில் எஞ்சியிருக்கும் அசுத்தங்களை தானாகவே சுத்தம் செய்வதற்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளன.  ஒவ்வொரு துவைக்கும் சுழற்சியின் போது இது நிகழ்கிறது. ஆனால் எங்களைப் போலவே, உங்களிடம் சமீபத்திய மாடல் இல்லாத சலவை இயந்திரம் இல்லை என்றால், ஓரிரு கழுவல் களுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் அசுத்தங்களை அகற்ற சலவை இயந்திரத்தில் கிளீன் டப் மோடை இயக்கி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

விளம்பரம்
Comfort antibac

3. கழுவிய பின் நல்ல துணி கண்டிஷனர் பயன்படுத்துங்கள்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சோப்பை மட்டும் பயன்படுத்தி துணிகளை பராமரிப்பது போதாது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.  அதனால்தான் பாக்டீரியா எதிர்ப்பு துணி கண்டிஷனர் துவைத்த பிறகு கம்ஃபோர்ட் அஃப்டர் வாஷ் ஆன்டி பாக்டீரியல் ஃபாப்ரிக் கண்டிஷனரை சேர்க்க நாங்கள் அதை தேர்ந்தெடுத்தோம் - இது கிருமி எதிர்ப்பு பூஸ்டர்கள் மற்றும் வாசனை சக்தியை கொண்டுள்ளது, அவை உங்கள் துணிகளை கிருமி இல்லாதவையாக வைத்திருக்கின்றன, மேலும் அவை முற்றிலும் புதிய வாசனையைக் அளிக்கின்றன, இது வெறும் சோப்பை மட்டும் பயன்படுத்தி வர கூடிய விஷயமல்ல.  பேக்கேஜிங்கை படித்தவுடன், இது கிராம்பு சாறு, இலவங்கப்பட்டை ஆயில், பேட்ச்சோலி(குளவி தாவர ஆயில்) ஆயில், சிட்ரோனெல்லா ஆயில் மற்றும் குயியாக்வூட் எக்ஸ்ட்ராக்ட் ஆகிய ஐந்து சக்தி வாய்ந்த இயற்கை சாறுகளால் ஆனது என்பதையும் கண்டறிந்தோம், மேலும் உங்கள் துணிகளிலிருந்து 99% கிருமிகளை கொல்ல இது பயனுள்ளதாக இருக்கும்!

இந்த சிறப்பு துணி கண்டிஷனர் பயன்படுத்திய பிறகு, மென்மையான மற்றும் வழுவழுப்பான ஆடைகளை நாங்கள் கவனித்தோம்.  உங்கள் துணிகளை சோப்புடன் துவைத்ததும், கண்டிஷனரை முழு வாளி தண்ணீரில் அரை மூடி சேர்த்து, உங்கள் துணிகளை ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.  பயன்பாட்டிற்கு முன் பேக்கேஜிங் குறித்த வழிமுறைகளை கவனமாகப் படியுங்கள்!

4. ஈரப்பதத்தை அகற்ற உங்கள் ஆடைகளை சரியான வழியில் உலர வைக்கவும்

ஈரமான ஆடைகள் கிருமிகளின் இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதால் சலவை இயந்திரங்களில் உலர்த்திகள் துணிகளிலிருந்து ஈரப்பதத்தை அகற்ற வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிந்தோம். எனவே, இயந்திரத்தில் உலர்ந்த ஆடை சுழற்சியை இயக்குவது முக்கியமானதாகும். பல்வேறு வகையான துணிகளை பூர்த்தி செய்வதற்காக சமீபத்திய இயந்திரங்கள் பல உலர்த்தும் அமைப்புகள் கொண்டுள்ளன என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். மேலும், சூரிய ஒளியில் உங்கள் துணிகளை உலர வைக்கலாம், அது கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை துணிகளிலிருந்து நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய முறையாகும்.  துவைக்கும் பராமரிப்பு லேபிள் சுருங்குவதற்கான நிகழ்தகவைக் குறிப்பிடுகிறது என்றால், சூரிய ஒளியில் உலர்த்துவது ஒரு சிறந்த வழி.

5. கிருமி அலர்ஜி மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உங்கள் ஆடைகளை நீராவி முறையில் சுத்தம் செய்யலாம்

எங்கள் அனுபவத்தில், நீராவி முறையை பயன்படுத்தி உங்கள் துணிகளை சுத்தம் செய்வது பாக்டீரியா மற்றும் கிருமிகளை அகற்ற உதவுகிறது என்பதை அறிந்தோம், இது நம்பகமான சானிடைசர் ராக செயல்படுகிறது, இது உங்கள் ஆடைகளுக்கு மென்மையை அளிக்கிறது. அலர்ஜி மற்றும் பாக்டீரியாவில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த நுட்பங்களில் ஒன்றாக நீராவி முறை என கருதப்படுகிறது, எல்லா நேரங்களிலும் புதிய மற்றும் சுத்தமான ஆடைகளை உறுதி செய்கிறது.

உங்கள் துணிகளை பாக்டீரியா, கிருமிகள் மற்றும் அழுக்குகளிலிருந்து விடுபடவும், புதியதாகவும், நல்ல வாசனையுடன் இருக்க இந்த எளிய உதவிக்குறிப்புகளை பயன்படுத்தவும்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது